Saturday 15 February 2014

அசினைத் தொடர்ந்து இலியானாவையும் வீழ்த்திய பாலிவுட் நடிகைகள்!

ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப்பறந்து விட்டு பாலிவுட்டுக்கு சென்றபோது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு. போன வேகத்திலேயே அங்குள்ள அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிவிட்டு தான் மட்டுமே இந்தி சினிமாவில் சுயாட்சி அமைத்தார் ஸ்ரீதேவி. இதனால் அப்போதைய பாலிவுட்டின் பிரபல நடிகைகள் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களில் தஞ்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டது.


அதனால், அதன்பிறகு தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பல நடிகைகளுக்கும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியது. அதனால்தான், கஜினி மூலம் இந்திக்கு சென்ற அசின், ஸ்ரீதேவியை போன்று சாதிக்க வேண்டும் என்று அதிரடியாக படங்களை கைப்பற்றி நடித்து வந்தார். ஆனால், சில இந்தி நடிகைகள் அதிரடியாக பிரவேசித்து அசினின் மார்க்கெட் அவுட் பண்ணி விட்டனர்.


அதேபோல், அசினைப்போன்று நாமும் இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஐதராபாத்திலிருந்து தனது முகாமை மும்பைக்கு மாற்றிய இலியானாவின் மார்க்கெட்டும் தற்போது சரிந்து கொண்டிருக்கிறதாம். காரணம், தென்னிந்திய நடிகைகள் தொடர்ந்து இந்திக்கு வந்து தங்களது வாய்ப்புகளை அபகரிப்பதை தடுக்கும் முயற்சியாக, தீபிகா படுகோனே, சோனாக்ஷிசின்ஹா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட அங்குள்ள அதிரடி நடிகைகள் தற்போது ஒன்று திரண்டு அசினைத்தொடர்ந்து இலியானாவையும் வீழ்த்தும் முயற்சியில் இறங்கியிருப்பதே இந்த சரிவுக்கு காரணமாம்.


இப்படி பாலிவுட் நடிகைகள் கைகோர்த்திருப்பதால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் இலியானா, இனி பாலிவுட்டில் நீண்டநாள், காலம் தள்ள முடியாது என்பதால், மறுபடியும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான முயற்சியை முடுக்கி விட்டுள்ளாராம். கூடவே பாலிவுட் படங்களில் நடித்ததற்கு கடுகளவும் குறையாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்றும் ஆந்திராவில் பரபரப்பு செய்தி வெளியிட்டு வருகிறார் இலியானா. இதனால் பாலிவுட் நடிகைகளுக்கு பயந்து தெலுங்குக்கு வரும் இலியானாவைப்பார்த்து தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டுள்ள, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இலியானாவைககண்டு பயத்தில் ஆடிப்போய் உள்ளனர்.

0 comments:

Post a Comment