Friday 7 February 2014

அலறும் கோலிவுட் நடிகைகள்!

பாணா காத்தாடி சமந்தாவுக்கு தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே சோதனைக்களமாகவே இருந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் என மெகா டைரக்டர்களின் படங்கள் கிடைத்தபோது, தோல் அலர்ஜி நோய் காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சில வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் கமிட்டானபோதும் அதே தோல் அலர்ஜி தலைதூக்கியது. இருப்பினும் சீரியசாக சிகிச்சை எடுத்து இப்போது கோடம்பாக்கத்தில் அதிரடி பிரவேசம் செய்ய தயாராகி விட்டார் சமந்தா.

அதைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருப்பதால், கோலிவுட்டிலுள்ள நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், சமந்தாவை நாயகியாக்கினால், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம். அதோடு, இங்குள்ள சில நடிகைகளை மாதிரியே தேவையில்லாத கண்டிசனெல்லாம் போடமாட்டார்.

குறிப்பாக, பாடல் காட்சிகளில் லிமிட் வைக்காமல், எந்த மாதிரி காஸ்டியூம் கொடுத்தாலும் அணிந்து நடித்து தாராள கவர்ச்சியை வழங்குவார் என்று படாதிபதிகளின் கவனம் சமந்தா பக்கம் திரும்பியிருப்பதுதான். இதனால், செக்போஸ்ட் தாண்ட மாட்டேன் என்று எக்குத்தப்பாக முடியை கோதிவிட்டபடி பேட்டி கொடுக்கும் சில இளவட்ட நடிகைகளும், சமந்தாவின் வரவு நம்மையும் சாய்த்து விடுமோ என்று கலவரமடைந்துள்ளனர்

0 comments:

Post a Comment