Sunday 2 March 2014

'மொழிவது யாதெனில்' படத்தில் அதிசய வேடம் ஏற்கும் நடிகர்!

'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். மேலும் 'காந்தம்', 'காதலுக்கு மரணமில்லை', 'விண்ணைத் தொடு' ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.


இதற்கிடையில், 'மொழிவது யாதெனில்' என்னும் புதிய படம் ஒன்றில் முழுக்க முழுக்க மாறுபட்ட கதாபாத்திரத்தில் தேஜ் நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக நடிக்கிறார். இதற்காக பலரது குரலில் பேசுவதற்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் குரலில் மட்டும் இன்றி, அவர்கள் பேசும் போது அவர்களது பாடி லேங்வேச் எப்படி இருக்கும், போன்ற விஷயங்களையும் உண்மையான மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுடன் பழகி, நுணுக்கமாக அறிந்து வருகிறார். மேலும் அதிரடியான சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.


பல வாய்ப்புகள் வந்தபோதும் நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் தேஜ்.


மொழிவது யாதெனில் படத்தை தயாரிக்கும் மாணிக்கவாசன் ஒரு கராத்தே வீரர் என்பதால், ஆக்சன் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருந்துள்ளார். அதற்கு ஏற்ப கதையும், ஹீரோவும் கிடைத்துவிட, படத்தை படு ஜோராக தொடங்கிவிட்டார். மிமிக்ரி செய்ய பல நாட்கள் பயிற்சிகளை மேற்கொண்ட தேஜ், சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கவும், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் பல ரிஸ்க்கான காட்சிகளை ரியலாக செய்து, ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வம் உள்ளிட்ட படக்குழுவினரை அசத்தி வருகிறார். இப்படத்தை கோபால் என்பவர் இயக்குகிறார்.


'மொழிவது யாதெனில்' படத்திற்குப் பிறகு தேஜ், மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'விரைவில் இசை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதையும், தேஜின் கதாபாத்திரமும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

0 comments:

Post a Comment