Sunday 2 March 2014

ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!



ஹன்சிகாவுடனான காதல் முறிந்து விட்டது இனி இருவருக்கும் இடையே ஆனா நட்பு மட்டும் தொடரும் என்று சிம்பு அறிவித்த நாள் முதலே இவர்களின் காதல் முறிவுக்கான காரணங்களாக பல்வேறு கட்டுக்கதைகள் எழுந்தன.


காதல் முறிந்ததற்கு ஹன்சிகாவின் அம்மா தான் காரணம் என்று சிம்பு தரப்பிலும், 'ஹன்சிகாவை சிம்பு மிரட்ட ஆரம்பித்ததால் தான்' , இந்த பிரிவு என்று ஹன்சிகா தரப்பிலும், அப்படி இல்லை 'சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து கொண்டு தான் இந்த காதல் முறிவை அறிவித் தார்கள்' என்று மற்றொரு கிசுகிசு தரப்பும் கூறிவந்தது.


இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில்,


 "ஹன்சிகாவின் நலன் கருதி நான் தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.இப்போதும் கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் "

0 comments:

Post a Comment