Wednesday 19 March 2014

நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் அமீர்கான்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த படங்களில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவை உலகறியச் செய்தவருமான அமீர்கான் நடிப்பிலிருந்து ஒருவருடம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


நேற்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அமீர்கான் இவ்வருடம் முழுவதும் தான் புதிய படங்கள் எதுவும் நடிக்கப்போவதில்லை என்றும், சமூக சேவையை மையப்படுத்தி தான் தொகுத்துவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை மென்மேலும் பிரபலமாக்க இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


அமீர்கான் தொகுத்துவழங்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி இந்தியாவெங்கிலும் பிரபலமாக விளங்கிவருகிறது. இந்நிகழ்ச்சியின் பிரபலத்தால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பவுள்ளனர்.


சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக அவலங்கள் குறித்த உரையாடல் நிகழ்ச்சியாகும். குறிப்பாக பெண் சிசுக்கொலை, குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, வரதட்சணைக் கொடுமை போன்ற கொடுமைகளைப் பற்றிய உண்மைகளைத் தோலுரித்துக் காட்டும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கிய இதன் முதல் சீசன் ஆகஸ்டில் நிறைவடைந்தது. இதன் இரண்டாவது சீசன் இம்மாதம் 2 ஆம் தேதி துவங்கி மூன்று எபிசோடுகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment