Wednesday 19 March 2014

ஐஸ்வர்யாராய்க்கு கெட்அவுட்! அசினுக்கு கட்அவுட்!!

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக அசின் நடிப்பதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இதில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார்.


இப்படம் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஐஸ்வர்யா நடிப்பதற்கு மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதையும் மீறி மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்திருந்தார்.


இதனால் குடும்பத்தில் பிரச்னை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அவர் மணிரத்னத்திடம் ஆலோசனை செய்தார். கடைசிவரை கால்ஷீட்டுக்காக காத்திருக்க தயாராக இருப்பதாக கூறினார்.


மணிரத்னம். இதற்கிடையில் ஷூட்டிங் தொடங்கப்பட்டால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசனை செய்தார் மணிரத்னம்.


ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த வேடத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் இன்னும் அறிவிக்கவில்லை. 

0 comments:

Post a Comment