Wednesday 19 March 2014

'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'

நேற்று முழுக்க சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பிஆர்ஓக்களிடையே கேட்கப்பட்ட கேள்விதான் இது.


கேட்டவர்கள்... தமிழக போலீசின் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.


சிலர் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி வைத்தார்கள். சிலர் அவர் முதலியார்தான் என்றார்கள். இன்னும் சிலர் இல்லையில்லை வேளாளர்தான், நல்லா தெரியும் என்றார்கள்.


'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'


ஆனால் யாருமே எதற்காக இந்தக் கேள்வி என திருப்பிக் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை தங்கள் நண்பர்கள் குழுவுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.


எதுவுக்கு இயக்குநர் சுந்தர் சி சாதி பத்தி கேட்கிறார்கள் போலீசார்? திமுகவுல சீட் கிடைக்காத கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா... அல்லது சுந்தர் சி வேற ஏதாவது கட்சிக்காக பிரச்சாரம் பண்ணப் போறாரா?


-இப்படியெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, 'எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியாதுங்க. மேலிடத்துல விசாரிச்சு ரிப்போர் தரச் சொன்னாங்க.. பத்திரிகைகாரங்களுக்கு நல்லா அவரைப் பத்தி தெரியுமேன்னு விசாரிச்சோம், அவ்வளவுதான்,' என்றார்.

0 comments:

Post a Comment