Wednesday 26 February 2014

உங்கள் காதலில் செய்யக் கூடாதவைகள் !

காதல் செய்யக் கூடாதவைகள் என சில விடயங்கள் இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை :

நண்பர்களை கழித்துவிடுதல் :

உமது காதலர் இவ்வளவுக் காலமாக பழகி வந்த தோழர்களையும், தோழிகளையும் வெட்டி விடச் சொல்லுவது.

முதலில் உமது காதலரின் தோழர்கள், தோழிகள் யார் என்பதை கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்களை ஒரு நாள் சந்தித்து நீங்களும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்களின் குண நலங்கள் நன்மையாக இருந்தாலோ, தீமை இல்லாமல் இருந்தாலோ அவர்களோடு நீங்காளும் நட்பைப் பேணலாம். அவர்களின் குண நலங்கள் தவறாக இருந்தால் உடனடியாக அவர்களை விட்டு விலகு என காதலரிடம் கட்டளை இடாதீர்கள். அது சிக்கல்களை உண்டு பண்ணும். கூடா நண்பர்களை உமது காதலர் கொண்டிருந்தால் அவர்களிடம் இருந்து படிப் படியாக காதலரை விலச் சொல்லலாம். அது குறித்து காதலரிடம் உங்களது நிலைப்பாட்டை விலக்குங்கள்.

நம்பிக்கைகளை அழித்துவிடுதல் :

காதல் என்றதும் தான் சார்ந்த அதே சமூகத்தில் இருக்கும் பெண்ணிடம் தான் காதல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு லவ்வர் கிடைப்பது கடினமானக் காரியமாகும். காதல் என்பதே எந்த வித பின்புலம் பாராமல் மனதோடு ஒன்றிப் போகும் உன்னத நட்பு ஆகும். ஆகவே உமதுக் காதலர் வேறு பின்புலத்தில் இருந்தால் அவரது நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவற்றை கைவிடும் படி கட்டளை இடாதீர்கள். உங்களுக்கு அவரது நம்பிக்கைகள் பிடித்து இருந்தால் நீங்களும் பழகிக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் அவரது நம்பிக்கைகளை கிண்டலோ, கேலியோ செய்யாதீர்கள். அவரை அவரதுப் போக்கிலே விட்டுவிடுவது நல்லது. வேண்டும் என்றால் ஒரு முறை கூறிப்பார்க்கலாம். அவர் விரும்பினால் தமது நம்பிக்கைகளை மாற்றட்டும். நீங்களே மாற்றும் படி கட்டளையிடாதீர்கள். காதலில் ஒருவரு மற்றவரை அடிமையாக நடத்துதல் கூடாது.

சொன்னதை செய்தல் :

காதல் என்றதும் சில விடயங்களில் பொது உடன்பாடு கொள்ளுதல் ஆகும். அப்படி உடன்பாடுகள் இல்லாத விடயங்களில் உமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டாம். பொது உடன்பாடுகளில் நீங்கள் கட்டளையிடாதீர்கள். நான் சொன்னதை நீ செய்யவில்லை என கட்டளையிடாதீர்கள். இருவரும் அமர்ந்து ஒரு காரியம் செய்ய முன் பேசுங்கள். குறிப்பாக காதலர் ஆனதும் நீங்கள் ஒரு வாகனம் வாங்க விரும்புகிறீர்கள். உங்களது ரசனையும், உமது காதலரின் ரசனையும் மாறுப்படும் என்றால் - முதலில் இருவரும் பேசி எப்படி வாங்கலாம் ஒருவர் ஒருவரின் விருப்பங்களை அறிந்துக் கொண்டு வாங்குதல் அவசியம்.

பின்புலம் பார்த்தல் :

காதலின் புனிதமே அது காதலரின் பின்புலத்தை ஆராய்வதில்லை. பின்புலம் என்ன என்று தெரிந்துக் கொள்ளுதல் அவசியம். ஆனால் தனது பின்புலம் உயர்வானது என்ற செருக்கு காதலில் வந்துவிட்டால் அது காதலாகாது. உங்களது காதலர் வேற்று மதம், சாதி, மொழி, நாட்டவராய் இருந்தால் அவற்றை அரவணைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது தோழர்களிடமும், பெற்றோரிடமும் கூறும் போது எடுத்துக் கூறுங்கள். காதலரின் பாசிட்டவான விடயங்களை முன்வையுங்கள். பின்புலத்தைத் தாண்டியும் நீங்கள் மகிழ்ச்கியான குடும்பம் ஒன்றை நிறுவ ஏதுவான நபர் இவர் தான் என காதலரைப் பற்றி உயர்வாகக் கூறுங்கள்.

உடல் ரீதியான உறவு :

காதல் என்றதுமே பீச், சினிமா, பார்க் சென்று உரசுதல் மட்டுமே என்று பலர் நினைத்திருக்கிறார்கள். காதல் என்பது வெறும் மனம் சம்பந்தம் மட்டுமில்லாமல் உடல் சம்பந்தமானதும் கூட. அதற்காக உங்களது இச்சைகளைத் தீர்க்கும் மெசினாக காதலரைப் பார்க்க வேண்டாம். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம். நிச்சயம் திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபட வேண்டாம்.


கையைப் பிடித்தல், அணைத்துக் கொள்ளுதல், முத்தமிடல் இவை யாவையும் காதல் சொன்ன அடுத்த நாளே செய்ய வேண்டாம். இந்த மூன்றும் காதலில் இன்றியமையாதவைகள் தான். ஆனால் அதற்கான நேரம், பக்குவம், மன நிலையை தயார்ப்படுத்துதல் அவசியம். உங்களது காதலர் வெறும் உடலுறவுக்குத் தான் உங்களை உட்படுத்த முயல்கிறார் என்றால் அது குறித்து அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உடலுறவில் ஈடுப்பட்டு விட்டால் பலருக்கு மன ரீதியான அழுத்தங்களும், குற்ற உணர்வும் ஏற்படும் இது காதலில் விரிசல்களையும், தேவையற்ற கர்பங்களைக் கூட ஏற்படுத்தலாம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதும் நினைவுக் கொள்ளத் தக்கது.


காதலரோடு வெளி இடங்களுக்கு செல்லும் போது தனிமையான இடங்களுக்குப் போக வேண்டாம். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்குச் செல்லுங்கள். தனிமையான இடங்கள் பல நேரம் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.


சில வேளைகளில் உமது காதலருக்கு மூன்றாம் நபர்களால் ஆபத்தும் நிகழக் கூடும். காதலரை வருங்கால கணவன்/மனைவியாகப் பார்க்கப் பழகினால் அவரது பாதுக்காப்பையும், கௌரவத்தையும், கண்ணியத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.


குறிப்பாக இந்த சமூகம் காதலர்கள் பொது இடங்களில் முத்தமிடுவதையும், கையைப் பிடிப்பதையும், அணைப்பதையும் அனுமதிக்க வேண்டும். இவற்றை அனுமதிக்காமல் தடுப்பதால் தான் பெரும்பாலான காதலர்கள் தனிமையான இடங்களுக்குச் சென்று பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment