Wednesday 26 February 2014

விக்ரமோடு போட்டியிட முடியாமல் தவிக்கும் எமி ஜேக்சன்!

ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரமோடு இணைந்து நடித்துவரும் எமி ஜேக்சன் சமீபமாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னால் விக்ரமோடு போட்டி போட்டு நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.


தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான விக்ரம் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்துவரும் திரைப்படம் ஐ.


இப்படத்தில் விக்ரம் மூன்று விதமான வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது கெட் அப் சேஞ்ச்களுக்காகவே இப்படத்தின் படப்பிடிப்புக்கள் இத்தனை நாட்களாக தொடர்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


கட்டுமஸ்தான உடலமைப்புக் கொண்டவராகவும், பின்னர் மிகவும் ஒல்லியானவராகவும் இப்படத்தில் அவர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.


இப்படத்தின் நாயகியான எமி ஜேக்சன் விக்ரமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். விக்ரம் மிகச் சிறந்த நடிகர் என்றும், தன்னால் அவருடன் போட்டியிட முடியாது என்றும், ஒருவேளை அவருடன் போட்டியிட வேண்டுமானால் தனக்கு இன்னும் பத்தாண்டுகள் அனுபவம் தேவைப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் விக்ரம் தனக்கு ஒரு முன்மாதிரி நடிகர் என்று கூறியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது தோற்றம் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.


ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் இயக்குனர் தரணி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment