Monday 17 March 2014

3 வார்த்தையில் கதை சொல்லும் பெண் டைரக்டர்!

கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து டிஜிட்டல் சினிமாவரை நடிப்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார் சீனியர் நடிகை லட்சுமி.


 இவர் தமிழில் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக நடித்தார்.


5 வருட இடைவெளிக்கு பிறகு மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடிக்கிறார்.


அவருடன் புதுமுக நடிகை அதிதி செங்கப்பா அறிமுகமாகிறார்.


இப்படம்பற்றி இயக்குனர் மதுமிதா கூறும்போது,வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா படங்களையடுத்து நான் இயக்கும் 3வது படம்.


ஐ லவ் யூ என காதலை வெளிப்படுத்துவதும், ஹவ் ஆர் யூ என்று நலம் விசாரிப்பதும் 3 வார்த்தைதான்.


இதில் காதலை குறிப்பிடும் படமாக இக்கதை இருக்குமா என்பதுதான் சஸ்பென்ஸ்.


வெங்கடேஷ் ஹரி நாதன் ஹீரோ.


அதிதி செங்கப்பா ஹீரோயின்.


எஸ்.பி.பி., லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


 சீனுவாசன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு.


கார்த்திகேய மூர்த்தி இசை.


எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இவ்வாறு இயக்குனர் மதுமிதா கூறினார். 

0 comments:

Post a Comment