Monday 17 March 2014

புரியாத கேள்விக்கு விடை கொடுத்த "தம்பி சிவகார்த்திகேயன்" வாழ்க.. வாழ்க..!

திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு அதிகமாகிவிட்டது, அதனால் தயாரிப்பாளர்கள் நஷ்மடைகிறார்கள் என்ற புலம்பல் ஒலிக்கும்போதெல்லாம் கூடவே ஒரு பட்டிமன்ற விவாதமும் படத்துறையில் நடக்கும்.

தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகைகளைக் கெடுக்கிறார்களா?

நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களைக் கெடுக்கிறார்களா?

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில்.. அப்படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனின் வெள்ளந்தியான பேச்சில் இதற்கு விடை கிடைத்தது..

பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் தன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கொண்டார்கள் என்பதை சொல்வதற்காக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுப்பேசினார்…

“….ஹன்சிகாவுக்கு மேட்ச்சா, இந்த படத்துக்காக என்னை கலரா காட்டறதுக்கு கேமிராமேன் கூட ஃபாரின் போயிட்டு 20 லைட்டு எல்லாம் வாங்கிட்டு வந்தாரு.

மத்த படத்துலலாம் எனக்கு ஒரே ஒரு அசிஸ்டென்ட்தான் இருப்பாங்க. ஆனால், இந்த படத்துல 10 பேர்என்கூடவே வருவாங்க.

இவர் யாருங்கன்னு கேட்டால், அவர்தான்ங்க உங்க ஹேரை சரி செய்வாரும்பாங்க.

இவரு யாருன்னு கேட்டால்… அவர்தான்ங்க உங்க சட்டை பட்டனை சரி செய்வாருன்னு சொல்லுவாங்க.

அப்ப, இவரு யாருன்னு கேட்டால்… உங்களுக்கு மேக்கப் போட்ட பிறகு துளி ஆயில் கூட முகத்தில வராம டச்சப் பண்ணுவாருன்னு, சொல்லுவாங்க.

மைக்கேல் ஜாக்சன் பாப்பா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க.”

தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகைகளை கெடுக்கிறார்களா?

நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களை கெடுக்கிறார்களா?

- என்ற கேள்விக்கான பதில் சிவகார்த்திகேயனின் பேச்சிலிருந்தே புரிந்திருக்குமே?

0 comments:

Post a Comment