Monday 17 March 2014

ஹன்சிகாவிற்கு வந்த அதிரடி கட்டளைகள்! தாங்குவாரா.. இவர்?

சிம்புவுடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு, நடிகை ஹன்சிகா செல்போன் பேசக்கூட அம்மாவின் அனுமதியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சமீபமாக வெளியான வார இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் ஷூட்டிங் ஸ்பாட்டைத் தவிர மற்ற இடங்களில் ஹன்சிகாவிடம் செல்போனைக் கையில் தருவதே இல்லையாம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட் தவிர ஏனைய இடங்களில் செல்போன் பேச இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஹன்சிகா.

சமீபமாக சிம்பு - ஹன்சிகா இருவருக்குமிடையேயான காதல் முறிவிற்குக் கூட முக்கியக் காரணமாக அவரது அம்மா இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அம்மாவின் முடிவே தனது முடிவு என்றும் ஹன்சிகா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்களுக்குத்தான் காதலிப்பதில் பிரச்னைகள் என்றால் பிரபலங்களுக்கு அதை விட அதிகப் பிரச்னைகள் இருக்கும் போல என்று ரசிகர்கள்
பேசிவருகின்றனர்.

ஹன்சிகா தற்பொழுது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் படு பிஸியாக நடித்துவருகிறார்.

0 comments:

Post a Comment