Monday 17 March 2014

மோகன்லாலின் வாய்ப்பைத் தட்டிப்பறித்த விஷால்!

இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் மென்மேலும் எதிர்பார்புக்களைக் கிளப்பிவருகிறது. இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படமாக இப்படம் அமையலாம் என்றும் தற்போதிருந்தே விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் கதை விஷாலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகத்தான் இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதிவரும் நிலையில், இப்படத்தின் கதையினை மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இப்படத்தின் இயக்குனர் திரு கூறியுள்ளாராம்.


மோகன்லாலிடம் இப்படத்தின் கதையினைக் கூறி அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்ட பிறகு, இக்கதையினைக் கேள்விப்பட்ட விஷால் தானே நடிப்பதாக முன்வந்தாராம். விஷாலுடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் பணியாற்றியிருப்பதால், அந்த நட்பின் அடிப்படையில் நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷால் நடிப்பது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.


இவ்வாண்டின் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவரும் இப்படம் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தனை எதிர்பார்ப்புக்களையும்
சமாளிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

0 comments:

Post a Comment